சில நேரங்களில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை கொடுத்து அதன் மூலம் மக்கள் பாதிக்கப்படும் அவல நிலை இருந்து வருகிறது. அப்படி கேரளா காசர்கோடு அரசு மருத்துவமனையில் கமலாக்ஷி என்ற பெண்ணுக்கு 1995 ஆம் ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறுவை சிகிச்சை தவறாக செய்யப்பட்டதால் அவரது கண் பார்வை பறிபோகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதன் காரணமாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 3 லட்சம் இழப்பீடாக தரும் படி 1997 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரசு இழப்பீடை தர மறுத்து வந்துள்ளது. இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு பாதிக்கப்பட்டவருக்கு 8 லட்சம் ரூபாயை இழப்பீடாக அரசிடம் இருந்து நீதிமன்றம் பெற்றுக் கொடுத்துள்ளது.
காவிரி விவகார பந்த்: தமிழ்நாடு வாகனங்கள் கர்நாடகாவிற்கு செல்ல தடை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!