தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் உள்ளிட்டோர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் முழுவதும் நாளை (செப்டம்பர் 28) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து தமிழ்நாடு வாகனங்கள் கர்நாடகாவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் செல்ல வேண்டாம் என காவல் துறை அறிவுறுத்தி வருகின்றனர்.