கடனுக்கு பதிலாக மனைவி… கணவர் அரங்கேற்றிய அதிர்ச்சி சம்பவம்!!!

0

தான் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் தன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய தன் நண்பர்களுக்கு அனுமதி அளித்து உள்ளார் கணவர். பெற்ற  கடனுக்காக தன் மனைவியை தன் நண்பர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பண்ருட்டி  எல்.ஆர்.பாளையத்தை அருகே  கணவன்,மனைவி மற்றும் அவர்களது  இரண்டு வயது  குழந்தையும் வாழ்ந்து  வந்துள்ளார். இந்த கணவன் மதுக்கு அடிமையாகவே குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் அதோடு கொரோனா ஊரடங்கும் அவர்களை விட்டு வைக்கவில்லை. இதனால் எவ்வித வருமானம் இன்றி தவித்து வந்து உள்ளனர். இதை சமாளிக்க மற்றும் தான்  குடிப்பதற்காக கணவன் தன் நண்பர்களான சுந்தரமூர்த்தி  மற்றும் மணிகண்டன் ஆகியோரிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் கடன் வாங்கி உள்ளார். இதனை அவர்கள் திருப்பி கேட்டகவே அதற்கு அந்த கணவன் இப்படி ஒரு அதிர்ச்சிகரமான பதிலை வழங்கி உள்ளார்.

அதாவது , தான் பெற்ற திருப்பிச் செலுத்த முடியாததால் அதற்கு பதிலாக அவர் தனது மனைவியுடன் உடல் ரீதியான உறவை வைத்துக்கொள்ள அனுமதி தந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவ்வப்போது கணவன் மனைவிக்கு தெரியாமல் தூக்க மாத்திரை கொடுத்து, தான் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு தொடரவே பொறுத்துக் கொள்ள முடியாத மனைவி தனது மகனை அழைத்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு சென்று விட்டு இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார். இதையடுத்து போலீஸ், கணவன் உட்பட நண்பர்கள் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here