144 தடை உத்தரவை மீறுவோரை சுட்டுக் கொல்லுங்கள் – பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி உத்தரவு..!

0

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களை சுட்டுக் கொள்ளுமாறு பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவிட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீவிரத்தை உணருங்கள்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையிலும் வைரஸின் தீவிரத்தை உணராத சிலர் தேவையின்றி வெளியில் சுற்றி வருகின்றனர். இதனால் தேவையின்றி வெளியில் நடமாடுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்து உள்ளார்.

சுட்டுக் கொல்லுங்கள்..!

இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டுட்டர்டே, ‘ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். ஊரடங்கு உத்தரவை மீறி, சுகாதார பணியாளர்கள், டாக்டர்களுக்கு இடையூறு செய்வது மிகப்பெரிய குற்றம் ஆகும். காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு எனது உத்தரவு. ஊரடங்கை மீறுவோர்களால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலோ, உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, அவர்களை சுட்டுக் கொல்லுங்கள்’ என தெரிவித்து உள்ளார்.

பிலிப்பைன்ஸில் இதுவரை 2,311 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் 96 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here