உலக சுகாதார நிறுவனம், இனி வரும் காலங்களில் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த வைரசால் மிக மோசமான அளவில் இரண்டாம் அலை ஏற்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா, மலேஷியா, பங்களாதேஷ் உருமாறிய சில கொரோனா வைரஸ்கள் மிக வீரியம் கொண்டதாக மாறி இருக்கின்றன.
சமீபத்திய உலக சுகாதார அமைப்பு தகவலின் படி டெல்டா கொரோனா வைரஸ் தற்போது வரை 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட 11 நாடுகளில் இந்த வைரஸ் புதிதாக பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த 96 நாடுகளில், டெல்டா ரக கொரோனா வைரஸ் இன்னும் வரும் காலங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் இதுவரை திரிபு அடைந்த கொரோனா வைரஸ்களிலேயே இந்த வைரஸ் மிகவும் ஆற்றலுடனும், வேகமான பரவல் தன்மை கொண்டதாகவும் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்