தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வரும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்கால் புதுச்சேரி பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிப்புகள் வந்துள்ளது.
வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பிப்ரவரி 22ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வாழை இலை விலை 2000 ரூபாய் – அதிர்ச்சியில் மக்கள்!!
தொடர்ந்து தமிழக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிப்ரவரி 20ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், பிப்ரவரி 21,22 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர எல்லைகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.