தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 1 வரை மழை விடாது – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 1 வரை மழை விடாது - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 1 வரை மழை விடாது - வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழ் நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழ் நாட்டில் சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவே இத்தகைய சூழல் தமிழ் நாட்டில் நிலவுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தற்போது வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று முதல் 3 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 1 வரை மழை விடாது - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 1 வரை மழை விடாது – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மேலும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்புள்ளத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here