பாடகி, நடிகை என பல்வேறு திறமைகளை கொண்டு ஒரு முன்னணி திரை பிரபலமாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் உள்ளாடை எதுவும் இன்றி கடற்கரையின் பாறைகள் மீது அமர்ந்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.
கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்து திரைக்கு வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அதற்கு முன்பு இவர் தனது பிரதான தொழிலாக திரைப்பட பின்னணி பாடகியாக சினிமா உலகிற்கு வந்தார். மேலும் இவர் டாப் இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். இதன் மூலம் ஒரு பிரபல திரைப்பட பாடகியாக சினிமாவில் வலம் வந்தார்.
இந்நிலையில் இவருக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் திரையில் ஒரு கதாநாயகியாக ஜொலிக்கும் வாய்ப்பை தந்தது. மேலும் இதை தொடர்ந்து இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இவர் நடிப்போடு மட்டுமல்லாமல் சர்ச்சைகள் மூலமாகவும் பேமஸ் ஆனார். மேலும் இவர் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் கடற்கரையில் பாறை மீது மிகவும் லேசான துண்டு போன்ற டூ பீஸ் போன்ற அமைப்பில் உள்ள உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்