சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக கைதாகியுள்ள அவரது கணவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்ரா தற்கொலை வழக்கு:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லையாக பிரபலமான நடிகை சித்ரா கடந்த 6-ம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி வழக்கு தொடர்ந்த காவல்துறையினர் முதற்கட்டமாக சித்ராவின் கணவர் ஹேமநாத்தை கைது செய்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது 5-ம் நாளாக போலீஸ் காவலில் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் சித்ரா சகநடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் பிடிக்கவில்லை என ஹேம்நாத் கூறி உள்ளார். இதனால் இருக்கவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் சித்ரா சொகுசு வாழ்க்கைக்கு ஆசைபட்டு அதிகம் கடனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற நோக்கில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். நேற்று சித்ராவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கட்சியின் பெயரை அறிவிக்கும் வரை பொறுமை காக்க வேண்டும்!!
மேலும் இன்று ஹேம்நாத்தின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹேம்நாத்தின் தந்தை “யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்?” என கேள்வி எழுப்பினார். அடுத்தகட்ட நடவடிக்கையாக ஹேம்நாத்தை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.