விஜே சித்ரா கடைசியாக கடை திறப்பு விழாவுக்கு வந்தபோது, Ex எம்எல்ஏ ஒருவரால் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டது என்றும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவரது கணவர் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சித் தகவல்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ், தொடரில் முல்லை என்ற பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை விஜே சித்ரா. இவர் கடந்த, 2020ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பிற்கு இவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. அண்மையில் இந்த வழக்கில் இருந்து ஜாமீனில், வெளியே வந்த ஹேமந்த் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது விஜே சித்ரா, கடைசியாக கடை திறப்பு விழாவுக்கு வந்தபோது, Ex எம்எல்ஏ ஒருவருக்கும் சித்ராவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது என்றும், இதனால் அவர்களுக்குள் ஒரு சில சண்டை சச்சரவுகள் நடந்தது என்றும் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்றும், இதுகுறித்து காவல்துறை விசாரிக்க காவல்துறைக்கு தான் பட்டியலைத் தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஹேமந்த்தின் இந்த பேச்சு, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்