ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலுக்கு நேர்ந்த சோகம்… வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி

உதவி இயக்குனராக திரை உலகிற்கு நுழைந்தவர் நடிகர் விஷால். அவரின் எனிமி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அவர் அடுத்ததாக விஷால் 31 என்ற  புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அவரின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக விஷால் அறிமுகமானார். அதற்கு முன்பு ஒரு சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். செல்லமே படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார். விஷால் மற்றும் ஆர்யா கூட்டணியில் உருவான அவன் இவன் என்ற படம் நல்ல வரவேற்பு மற்றும் அமோக வெற்றியை பெற்றது.

இதனை அடுத்து இவர்களின் இந்த கூட்டணி மறுபடியும் இணைந்து எனிமி என்ற படத்தில்  நடித்து உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து விஷால் அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் விஷால் 31 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்  படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்து வருகிறார். மேலும் பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு சண்டை காட்சியை படமாக்கும் போது அவரின் முதுகில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு பிசியோதெரபி மருத்துவர்  மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சைக்கு பின்னர் அவர் நலம் பெற்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எனிமி படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here