பத்திரமா இருங்க மக்களே.. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

0
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் எச்சரிக்கை தகவல்!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் எச்சரிக்கை தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள தகவலின் படி வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் ஜூலை 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் தமிழகத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் வட கடலோர மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களை தவிர ஏனைய பிற மாவட்டங்களில்  வறண்ட வானிலையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதே போல ஜூலை 23 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூரில் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழையும், கன்னியாகுமரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here