ஏதாவது ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அப்பள்ளி திறக்க அனுமதிக்கப்படாது என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்து விருதுநகர் மாவட்ட முதமைக்கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் 1 முதல் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட வேண்டும், உரிய சுகாதார வசதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளும் அரசால் வெளியிடப்பட்டது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, தெலுங்கானாவிலும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது அனைத்து பள்ளிகளுக்கும் விருதுநகர் மாவட்ட முதமைக்கல்வி அலுவலர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, “ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அப்பள்ளி திறக்க அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்