எதிர்வரும் ஒரு நாள் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில், ஆசிய அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் வடிவில் நடைபெற்று வருகிறது. 13 போட்டிகளை உள்ளடக்கிய இந்த தொடரில், இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில், நேபாளம் அணியை பாகிஸ்தான் அணியும், பங்களாதேஷ் அணியை இலங்கை அணியும் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த தொடரின் 3வது போட்டி நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியின் மூலம், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து ஒரு நாள் வடிவில் உச்சத்தை அடைய உள்ளனர். அதாவது, விராட் கோலி (கிங்) மற்றும் ரோஹித் சர்மா (ஹிட்மேன்) ஜோடி பார்ட்னெர்ஷிப் அமைத்து நாளை நடைபெற இருக்கும் போட்டியில் 2 ரன்கள் மட்டும் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச ஒருநாள் அரங்கில் 5000 ரன்களை எட்டிய இந்திய ஜோடி என்ற வரலாறு படைப்பார்கள்.