ஐசிசி சார்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி மோதி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடைந்து இந்திய அணியானது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், இந்தியாவின் விராட் கோலி 63 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் உட்பட 54 ரன்களை விளாசி அசத்தி உள்ளார். இதன் மூலம், வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேலாக எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி அடைந்துள்ளார். இவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 117 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.