விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியலட்சுமி முதல் சிறகடிக்க ஆசை சீரியல் வரை டாப் ரேட்டிங்கில் போயிக்கொண்டுள்ளது. மேலும் இல்லத்தரசிகளுக்கு வருத்தமளிக்கும் விஷயம் என்றால் அது சில காலமாக முன்னணி சீரியல்கள் பலவும் முடிவுக்கு வந்து கொண்டிருப்பது தான்.
ஈரமான ரோஜாவே 2, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்கள் எண்டு கார்டு போடப்பட்டது. இதை தொடர்ந்து கண்ணே கலைமானே சீரியலும் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் விஜய் டிவி புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது அர்ஜுனை தோற்கடித்து விட்டு சொத்தை எப்படி கைப்பற்றுவது என்று போராடி கொண்டுள்ளனர்.
தேவையே இல்லாமல் ரோஹிணியும் அர்ஜுனை நம்பிக்கொண்டுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது சீரியலை இன்னும் கொஞ்ச மாதத்தில் முடிக்கலாம் என்று சீரியல் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.