விஜய் டிவி சீரியலுக்கு தடை?? ஒரு ப்ரோமோவால் வந்த வினை!!

0

விஜய் டிவியில் புதிதாக தென்றல் வந்து என்னை தொடும் என்ற புதிய சீரியலின் ப்ரோமோ வெளியாகியது. இதில் நாயகிக்கு விரும்பம் இல்லாமல் நாயகன் தாலி  கட்டுவார். தற்போது இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலின் நாயகன் வினோத் மற்றும்  தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஈரமான ரோஜாவே முடிய உள்ளதால் அதில் நடிக்கும் பவித்ரா தென்றல் வந்து என்னை தொடும் என்ற புதிய விஜய் டிவி சீரியலின் நாயகன் மற்றும் நாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.

வெளிநாட்டில் நன்கு படித்து விட்டு வரும் ஒரு தமிழ் பெண், கோவிலில் அடாவடியாக நடந்துகொள்ளும் நாயகனை சந்திக்கிறாள். அப்போது இருவருக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் கதாநாயகன் வலுக்கட்டாயமாக நாயகிக்கு தாலி கட்டி விடுகிறான். இந்த ப்ரோமோ சமூகத்திற்கு தேவை இல்லாத செய்திகளை கொண்டு சேர்ப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

தற்போது இந்த சீரியலின் விளம்பரம் மிகவும் பிற்போக்கு தன்மையுடன் ஆண் ஆதிக்கம் மற்றும் கட்டாய திருமணத்தை ஊக்குவிப்பதாகவும் உள்ளதாக இந்த சீரியலுக்கு எதிரான கண்டங்கள் வலுத்துள்ளன. சீரியல் தொடங்கும் முன்னரே இப்படி ஒரு சவாலை விஜய் டிவி சந்தித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here