மழையில் நனைந்தபடி டான்ஸ்…நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரச்சிதா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ..!!!

0

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். இதில் கதாநாயகியாக நடிப்பவர் ரச்சிதா மகாலஷ்மி. இவர் தற்போது மழையில் நனைந்தபடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரச்சிதா மகாலஷ்மி 2011-12ம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து இவர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியாபுரம் போன்ற தமிழ் நாடகங்களில் நடித்து வந்தார். இதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, கன்னட மொழி நாடகங்களிலும் நடித்துள்ளார். தற்சமயம் நாம் இருவர், நமக்கு இருவர் நாடகத்தில் நடித்து வருகிறார்.

இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் மலையில் நனைந்தபடி நீர்ப்பறவை படத்தில் வரும் பற பற பற பறவை ஒன்று கிறு கிறுவென தலையும் சுற்றி பாடலை ரசித்து கேட்பது போல ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு அவர் ரசிகர்கள் லைக்ஸையும் கமெண்ட்ஸையம் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here