தற்போது இருக்கும் முக்கிய சின்னத்திரை தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பிரபல தொகுப்பாளிகளான டிடி, அர்ச்சனா ஆகியோருக்கு அடுத்து அந்த இடத்தை பிடித்தவர் பிரியங்கா தான். இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய தி வால், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகள் நல்ல TRP ரேட்டிங்கை பெற்றது.
இவருக்கும் பிரவீன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது. ஆனால் தற்போது இவர் தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பிரியங்காவின் தம்பிக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் போட்டோ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார் பிரியங்கா.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் குழந்தை வீட்டுக்கு வந்த புகைப்படத்தை பதிவிட்டு “வெல்கம் ஹோம் கண்ணா” என்று தலைப்பிட்டு குழந்தை வீட்டுக்கு வந்துட்டா இனி எனக்கு என்ன வேணும் என பதிவிட்டுள்ளார் பிரியங்கா. இவரின் இந்த அழகிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram