விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் தன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர், தொகுப்பாளினி பிரியங்கா. தற்போதைய நிலவரப்படி பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவருடைய காமெடியும், எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8 ஆகிய நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட இவர் புட் பாயிசன் காரணமாக திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீடியோவை வெளிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அதில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். அந்த நேரத்திலும் மக்களுக்காக வீடியோ வெளியிட்டதை ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு அது சம்மந்தமான போட்டோக்களையும், வீடியோகளையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது பிரியங்காவும் தான் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!