ஒவ்வொரு நாளும் புது புது ட்விஸ்டுகளை கொடுத்து ஹைப்பை இன்க்ரீஸ் செய்யும் பாக்கியலட்சுமி தொடர் யாரும் எதிர்பார்த்திராத விதமாக மொத்த கதையும் குழம்பியுள்ளது. அதாவது, வாழ்க்கைன்னு இருந்தா சில அடிகள் விழ தான் செய்யும். ஆனால் வாழ்க்கையே அடியா இருந்தா?? பாவம் பாக்கியா என்ன தான் பண்ணுவாங்க?
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதுவும் அடுத்தடுத்து குடும்பத்துல உள்ள எல்லாரும் பாக்கியாவுக்கு எதிரா மாறும் போது, எல்லாத்தையும் ஒரே சமயத்துல அவங்களால சமாளிக்க முடியல. இதுனால ரசிகர்களும் ரெண்டு பசங்க சிங்கம் மாதிரி இருந்தும் ஒரு பிரயோஜனம் இல்லை. அதுவும் செழியனை கூட அவன் அப்படிதானு கணக்குல சேர்த்துக்க வேணாம். ஆனா எழில் அப்டி இல்லையே. பாக்கியாவோட செல்ல மகன் தான..விஷயம் தெரிஞ்சபோவும் கோபியை ஏதும் பேசல.
இப்போ அம்மா கஷ்டத்துல இருக்கப்போவும் ஏதும் பண்ணல.இப்படி போனா எதுல தான் முடியும் கதை அப்டினு இவ்ளோ நாள் பார்வையாளர்களின் ஆதங்கம் கூடிய விரைவில் நடக்க இருக்கிறதாம். அட ஆமாங்க! எழில். கோபியை எதிர்த்து பேச போகிறாராம். அதுவும் நீ இருந்தா அம்மாகூட வாழு. இல்லைனா நீ உயிரோட இருக்குறதுல அர்த்தமே கிடையாதுன்னு சொல்லி சரமாரியாக பேச போகிறாராம். இப்படி ஒருவேளை எழில் செஞ்சிட்டா வேற லெவல்லா இருக்கும்.