நடிகர் விஜய் தென்னிந்திய தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது சினிமாவை தாண்டி அரசியலில் களம் காண இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் மக்கள் இயக்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பல நல்ல தொண்டுகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
சமீபத்தில் கூட 10, 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை வழங்கினார். அதுமட்டுமின்றி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று இரவு பாடசாலை வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் ஒரு தகவலை கூறியுள்ளதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது தமிழகத்தில் உள்ள விஜய் நடத்தும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்குவது குறித்து விஜய் நிர்வாகிகளுடன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் அரசியல் குறித்து விஜய் தற்போது வரை வாயை திறக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.