விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி, சௌராஷ்டிரா அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.
விஜய் ஹசாரே டிராபி:
விஜய் ஹசாரே டிராபியில் காலிறுதி போட்டியில், தமிழ்நாடு அணி சௌராஷ்டிரா அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் பாபா இந்திரஜித் பவுலிங்கை தேர்வு செய்திருந்தார். இதையடுத்து, களமிறங்கிய சௌராஷ்டிரா அணியின் ஜாக்சன் (8) வந்த வேகத்தில் வெளியேறினார். இவரை தொடர்ந்து, களமிறங்கிய ஜெய் கோஹில் 34, சமர்த் வியாஸ் 27, ஹர்விக் தேசாய் 61 என சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால், சௌராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்கள் எடுத்திருந்தனர். தமிழ்நாடு சார்பாக சாய் கிஷோர் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெகதீசன் 8, சாய் சுதர்சன் 24, பாபா அபராஜித் 4 என சொற்ப ரன்களில் வெளியேற, பாபா இந்திரஜித் (53) மற்றும் சாய் கிஷோர் (74) என ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர்.
பேசுனது போதும், நிறுத்து ராதிகா.., இனியாவுக்காக ராதிகாவை ஓரங்கக்கட்ட தயாரான கோபி!!
ஆனால், இவர்களும் ஒரு கட்டத்தில் வெளியேற, தமிழ்நாடு அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 44 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த டிராபியில் பல சாதனைகளை படைத்த தமிழ்நாடு அணி சௌராஷ்டிரா அணியிடம் வீழ்ந்து காலிறுதியுடன் திரும்பியது.