விஜய் ஹசாரே டிராபியில் பல சதங்களை குவித்து உலக சாதனை படைத்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்:
இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50 ஓவர் வடிவில் நடைபெற்று வரும் இந்த டிராபியில், இளம் வீரர்கள் பலர் பல்வேறு சாதனைகளை படைத்தும், முறியடித்தும் வருகின்றனர். இந்த வகையில், மகாராஷ்டிரா அணிக்காக விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை படைத்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர் இந்த டிராபியில், கடைசியாக விளையாடி 8 போட்டிகளில், 5 சதம், ஒரு இரட்டை சதம் உட்பட 987 ரன்களை குவித்துள்ளார். இந்த டிராபியில், அசாம் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும், இவர் 126 பந்துகளில் 18 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 168 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை., வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த இந்திய வீரர்!!
இதனால், இவர் அடுத்த வருடம் முதல் சர்வதேச இந்திய அணியின் ஒருநாள் தொடர்களில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடும் பட்சத்தில், தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டு, 50 ஓவர் (ஒருநாள்) உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.