தீவிரமாக பரவிவரும் கொரோனா பெரும்தொற்று இரண்டாம் அலையில் பல உயிர்பலியை ஏற்படுத்திவருகிறது.தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
உயரும் கொரோனா பலி :
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
கொரோனா முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலை உலகமுழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. முதல் அலையைக்காட்டிலும் அதிகமான பாதிப்புகள் இரண்டாம் அலையில் ஏற்படுகின்றது. இதனை தடுக்கவும் ,பெரும்தொற்றிலிருந்து மக்களை காக்கவும் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.கொரோனா தொற்று விளையாட்டு வீரர்கள்,அரசியல் பிரமுகர்கள்,சாமானியமக்கள் என அனைவர்க்கும் பரவி வரும் நிலையில் அண்மையில் வி.சி.க. பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தன.
விசிக பொருளாளர் முகமது யூசுப் கொரோனா கொடுந் தொற்றுக்கு ஆளாகியிருப்பது கவலை அளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் சிகிச்சைபலனின்றி விசிக பொருளாளர் முகமது யூசுப்உயிரிழந்தார்.இவரது மறைவு வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கட்சியினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது