கத்ரினா – விக்கிக்கு கொலை மிரட்டல் விட்ட ஆசாமி கைது: போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!

0
கத்ரினா - விக்கிக்கு கொலை மிரட்டல் விட்ட ஆசாமி கைது: போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!

பாலிவுட் பிரபலம் கத்ரீனா – விக்கி கௌசல் ஜோடிக்கு இன்ஸ்டகிராம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்விந்தர் சிங் கைது:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைஃப். கடந்த வருடம் இவரை விட 5 வயது கம்மியாக உள்ள முன்னணி இளம் நடிகரான விக்கி கௌசலை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இன்ஸ்டகிராம் மூலமாக கத்ரினா – விக்கி தம்பதியினருக்கு மர்ப நபர் கொலை மிரட்டல் விட்டதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் குற்றவியல் மிரட்டல், பின் தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்து அந்த மர்ம ஆசாமிகளை தொழில்நுட்ப பிரிவு மூலம் தேடும் பணிகளை முடுக்கிவிட்டனர். இந்நிலையில் அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மன்விந்தர் சிங் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. அவர் நடிகை கத்ரினாவின் தீவிர ரசிகர் என தெரிய வந்தது. மேலும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக அவர் முயற்சி செய்துள்ளார். இருப்பினும் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சல்மான்கானுக்கும் இதே போன்று கொலை மிரட்டல் கடிதம் வந்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here