விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்களை பலர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.அதன்படி இதில் போட்டியாளராக கலந்து கொண்ட விசித்ரா, தினேஷின் பர்சனல் லைஃப் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனால் தினேஷ் விசித்ராவுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் தினேஷ் மற்றும் விசித்திரா இருவரும் இணைந்து ”அண்டாகாகசம் – 2” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர். அப்போது இவர்கள் இருவரும் ஒரே அணியில் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் விசித்ராவுடன் தான் ஒரே அணியில் இருக்க பங்கேற்க தனக்கு விருப்பம் இல்லை என தினேஷ் வெளிப்படையாக கூறியுள்ளாராம்.அவரின் கருத்துக்கு விசித்ரா சண்டை போட்டுள்ளார். பின்னர் நிகழ்ச்சி குழுவுடன் பிரச்சனை செய்து ஷோவை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.