தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக நிற்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், ஆலத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அதிபர் ஆட்சியாக மாறிவிடும். அதன்பின்னர் ரேஷன் கடைகள் இருக்காது, 100 நாள் வேலை திட்டம் இருக்காது, கடன் வசூலிக்க வங்கி நிறுவனங்கள் வீட்டிற்கே வந்துவிடும். அதானி, மல்லையா கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
IPL 2024 : சென்னை அணிக்கு நெருக்கடியா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!