பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர் வனிதா விஜயகுமார். தற்போது இவரை பற்றிய விஷயம் தான் சமூக வலைத்தளங்களில் பரவி கொண்டுள்ளது. வனிதா பற்றி சிறு விஷயம் என்றாலும் அது காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்து விடும். அதே போல தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது வனிதா தர்பார் என்ற நிகழ்ச்சியில் பிக் பாஸ் பற்றிய கருத்துக்களை வனிதா தெரிவித்து வருகிறார். அதில் அதில் குடித்து விட்டு வந்ததாக செய்திகள் பரவி வருகிறது.
வனிதா
வனிதா, பீட்டர் பால் பிரேக்கப் விவகாரம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. மேலும் பிரேக்கப் காரணமும் வனிதாவே வெளியிட்டிருந்தார். வனிதா & பீட்டர் பாலை பற்றிய பல வதந்திகளும் நாள்தோறும் பரவி வருகிறது. இதற்கு வனிதா பதிலடியும் கொடுத்துக் கொண்டு தான் உள்ளார். வனிதா பீட்டர் பாலிடம் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சியதாகவும் செய்திகள் வெளியானது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் வனிதாவோ ட்விட்டரில் நான் தான் மற்றவர்களை நிராகரிப்பேன், பீட்டர் பால் யார் என்னை வேண்டாம் என்று சொல்ல என்று பதிவிட்டிருந்தார். இதுவும் வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அவர் பல பிரச்சனைகளை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார் என்றே சொல்லலாம். மேலும் அவர் நடத்தி வரும் வனிதா தர்பார் நிகழ்ச்சியில் பிக் பாஸ் பற்றிய பல கருத்துக்களை பகிர்வதுண்டு.
இந்நிலையில் அவர் பாலா பற்றி பேசிய வீடியோவில் கண்ணாடி அணிந்தவாறு பேசியிருப்பார். ஏன் என்று கேட்டதற்கு கண்ணில் பிரச்சனை இருப்பதாக கூறினார். மேலும் அந்த வீடியோவில் சிக்னல் ஒழுங்காக கிடைக்காததால் பல இடையூறுகளும் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் பேசியதும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அதாவது யாருக்கும் புரியாதவரே பேசியுள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
கேட்கும் கேள்விகளுக்கு தாமதமாகவே பதிலளித்து இருந்தார். மேலும் ஏற்கனவே ரவீந்தர் வீடியோவில் குடிக்காமல் பேசுனா நல்லா இருக்கும் என்று பங்கமாக கலாய்த்து இருந்தார். இந்நிலையில் தற்போதும் இதே போல குடித்து விட்டு பேசியுள்ளதாக கூறி வருகின்றனர். இதனால் கமன்டில் பலரும் வனிதாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.