2019 ல் சீனாவில் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனாவால் உலக முழுவதும் உள்ள அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு உயிர் சேதமும் ஏற்படுத்தியது. தடுப்பூசி, முகக்கவசம் என பல்வேறு நடவடிக்கையால் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது கொரோனா BF.7 என பரிணாம வளர்ச்சி அடைந்து அதிதீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த புதிய வகை வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க பல்வேறு ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றனர். இதன்படி தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான தேவைகளை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம்? இது எங்கெல்லம் நடைமுறை தெரியுமா.., அமைச்சர் விளக்கம்!!
இதைத்தொடர்ந்து சர்வதேச விமான நிலையங்களில் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை, முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறையால் தடுப்பூசி மையம் மதுரை விமான நிலைய வெளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன்படி தடுப்பூசி போடாதவர்கள் விருப்பத்தின் பேரில் கோவிட் ஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.