சீரியல் என்று எடுத்துக் கொண்டாலே சன் டிவி தான். இதில் ஒளிபரப்பான பல தொடர்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவை. அப்படி இல்லத்தரசிகளை ஒட்டுமொத்தமாக கவர்ந்த சீரியல் என்றால் அது வாணி ராணி தொடர் தான். ராதிகா சரத்குமார் டபுள் ரோலில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இந்த தொடரை ஓ என் ரத்தினம் இயக்கி இருந்தார். இந்த சீரியல் மட்டுமின்றி, பிரியமான தோழி, அழகு, பாண்டவர் இல்லம் மற்றும் செவ்வந்தி போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கியிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவருடைய மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சி ஊரை சேர்ந்த இவர் பிரியா என்ற பெண்ணை பத்து வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு கோடைகால விடுமுறை என்பதால் பொள்ளாச்சிக்கு தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
விஷ்ணு- சம்யுக்தா பிரிய இவர் தான் காரணம்.., மட்டமான வேலையை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!!
இந்நிலையில் இந்த நிலையில் நேற்று இரவு ரத்தினத்திற்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் சிறிய சண்டை ஏற்பட்டு உள்ளது. பின் மறுநாள் தன்னுடைய மகன்களை அழைத்து வர ரத்தினம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். மகன்களை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிய ரத்தினத்திற்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அவர் வெளியே சென்ற நேரத்தில் பிரியா வீட்டில் தற்கொலை செய்து இருக்கிறார். அதன் பின்னர் பிரியாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை எஅர்[ஏற்படுத்தியுள்ளது.