தமிழ்நாட்டின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் தினம் முதல் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மிகவும் பிரபலமான மதுரை மாவட்ட அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி அண்மையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
புரோ கபடி லீக்: டாப் 10 ரைடர்ஸ்க்கான பட்டியல் வெளியீடு.., புள்ளிவிவரம் இதோ!!
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் http://madurai.nic.in என்ற இணையதளத்தில் இன்று (பிப்.9) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இப்போட்டி அரசின் விதிமுறைகளை பின்பற்றியே நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.