இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்ட போர் தீவிரமடைந்து வருவதால், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் காசா பகுதிகளில் சரிவர உணவு பொருட்கள் சென்றடையாததால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையில், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கோலியா?? தோனியா?? CSK அணியை எதிர்கொள்ளும் RCB…, யார் யாருக்கெல்லாம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு??
அதன்படி இன்று (மார்ச் 22) நடைபெற உள்ள பேச்சுவார்த்தை கூட்டத்தில், இரு தரப்பினரும் பிணைக் கைதிகளை விடுவிக்கவும், உணவுப் பற்றாக்குறை உள்ள பகுதிக்குள் கூடுதல் உதவிப் பொருட்களை அனுப்ப இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் காசாவில் இஸ்ரேல் படையினர், உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்க, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.