நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கான ‘”விவசாயி” சின்னத்தை, ஆந்திராவில் உள்ள மற்றொரு கட்சிக்கு ஒதுக்கி விட்டனர். இதையடுத்து சின்னத்தை மீட்க, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், “அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான சின்னம், முதலில் வருபவர்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.” என நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: காசாவில் உடனடி போர் நிறுத்தம்., களமிறங்கிய அமெரிக்கா!!!
இதையடுத்து லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம்? ஒதுக்கப்படும் என சீமான் உள்ளிட்ட பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.