கொரோனா பரவல் எதிரொலி – மாநிலத்தில் பிப்ரவரி 15 வரை பள்ளிகளை மூட உத்தரவு!!

0

மாநிலத்தில் வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தினால், வருகிற பிப்ரவரி 15 வரை பள்ளிகளை மூடுமாறு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் தொற்று பரவல் குறைந்து வருவதால், பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் ஒரே நாளில் 10, 937 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 23 நபர்கள் இறந்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலின் தீவிரத்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜனவரி 16 ஆம் தேதி மூடப்பட்டது. தற்போதுவரை தொற்று பரவல் குறையாததால், வருகிற பிப்ரவரி 15 வரை மாநிலத்தில் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. அது வரை தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here