நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்கும் பணியில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது உலக நாடுகளுக்கு உதுவுவதற்காக பைசர் நிறுவனத்திடமிருந்து தடுப்பூசிகளை வாங்குகிறது அமெரிக்கா.
தடுப்பூசி:
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என மாறி மாறி பரவி வருவதனால் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. இதனை தடுக்கவும் கட்டுக்குள் கொண்டு வரவும் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.
மேலும் நோய்பரவும் விகிதத்தை குறைப்பதில் தடுப்பூசி முக்கியபங்காற்றி வருகிறது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே எடுத்து கூற பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் கூட்டாகச் சேர்ந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி, கொரோனா வைரஸ்க்கு எதிராக சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடமிருந்து 500 மில்லியன் தடுப்பூசிகளை உலக மக்களுக்கு உதவ அமெரிக்க அரசு வாங்க முன்வந்துள்ளது அனைவராலும் பாரத பட்டு வருகிறது.