உலகில் வெறும் 3 பில்லியனர்களுக்காக மட்டும் தயாராகும் ரோல்ஸ்ராய்ஸ் கார்.. விலையை கேட்டா மயக்கம் வந்துரும்!!!

0

ஆடம்பர கார் தயரிப்பில் ஜாம்பவானாக இருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தற்போது உலகில் மூன்று பெரும் கோடிஸ்வரர்களுக்காக, சுமார் ரூ. 204 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கார்களை தயாரித்து வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலகளவில் ஆடம்பர கார் பிரியர்களின் விருப்பத்துக்குரிய கார் பட்டியலில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன கார்கள் நிச்சயம் இடம் பெற்று விடும். ஆடம்பரத்தின் அடையாளமாக பார்க்கப்படும் ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனம் உலகில் 3 பில்லியனர்களுக்காக அசத்தலான கார்களை தற்போது வடிவமைத்து வருகிறது.

2021 ரோல்ஸ்ராய்ஸ் போட் டைல் என்ற இந்த ஆடம்பர காரினை கடந்த மாதம் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் விலை 28 மில்லியன் டாலர். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 204 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாகவே ரோல்ஸ்ராய்ஸ் காரினை வாங்க அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சில அடிப்படை தகுதிகளை வைத்துள்ளது.

அதில் அடிப்படை தகுதி வாடிக்கையாளரின் சொத்துமதிப்பு, மேலும் வாடிக்கையாளரின் இரண்டு தலைமுறைக்கான குற்ற பின்னணியையும் சரிபார்க்கும். குற்ற பின்னணி இல்லையென்றால் அவர்கள் ஆர்டர் குடுத்த காரினை தயாரிக்க ஆரம்பிக்கும். தற்போது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் உலகில் 3 பில்லியனர்களுக்காக ரோல்ஸ்ராய்ஸ் 2021 ரோல்ஸ்ராய்ஸ் போட் டைல் ரக கார்களை தயாரித்து வருகிறது.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here