நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து கேட்டு சென்னை ஐகோர்ட்டில் விண்ணப்பித்துள்ளதாக பாலிவுட் விமர்சகரான உமைர் சந்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். ஆனால் பிரிய போகிறோம் என்று சொன்ன அவர்கள் தற்போது வரை விவாகரத்து செய்யவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதனால் அவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்கள் மட்டுமின்றி சூப்பர் ஸ்டாரும் அதிகம் எதிர்பார்த்தார். ஆனால் அது இப்பொழுது வரை நடக்கவில்லை. இந்த சோகத்தில் அனைவரும் இருக்கும் நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து குறித்து பாலிவுட் விமர்சகரான உமைர் சந்து சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது அந்த பதிவில், நடிகர் தனுஷ் இன்னொரு பெண்ணிடம் பழகி வருகிறார் என்றும், ஐஸ்வர்யாவை ஏமாற்றி விட்டார் என்றும், அதனால் இருவரும் விவாகரத்து கேட்டு சென்னை ஐகோர்ட்டில் விண்ணப்பித்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
என்னடா இது.., தம்மாத்துண்டு பாவாடையில் வித்தை காட்டறீங்க.., திணறவிடும் கிரண்!!
இதை பார்த்த தனுஷ் ரசிகர்கள், நீயே ஒரு டுபாகூர் நீ சொல்லுறத நாங்க நம்பணும என்று கமெண்ட் செய்துள்ளனர் . மேலும் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேரடியாக சொன்னால் மட்டுமே நாங்க நம்புவோம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.