தமிழகத்தில் இன்று ஏற்கனவே பரமக்குடி அதிமுக எம்எல்ஏ.,விற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், தற்போது உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக., எம்எல்ஏ அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், தற்போது அதிமுக எம்எல்ஏ.,க்கள் இடையே கொரோனா பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் எம்எல்ஏ.,க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கல்வான் பள்ளதாக்கு சண்டையில் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் – சீனா ஒப்புதல்..!
இன்று காலை பரமக்குடி எம்எல்ஏ சாத்தன் பிரபாகரன், அவரது மகன் மற்றும் மனைவி என குடும்பத்திற்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருவது கட்சி நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.