லடாக் கிழக்கு கல்வான் பள்ளதாக்கு பகுதி மோதலில் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் தான் என சீனா ஒப்பு கொண்டு உள்ளது.
சீன – இந்தியா எல்லை விவகாரம்..!
லடாக்கின் கிழக்கு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை.
இந்த நிலையில் சீன பாதுகாப்புத் துறை முதல்முறையாக இந்தியாவுடன் தீவிரமாக போரிட்டு வருகிறோம். எல்லையில் இந்திய நிலப்பரப்பை கைப்பற்றி உள்ளோம். எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் தான் என்று தெரிவித்துள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
சீன பாதுகாப்புத் துறை அறிக்கை..!
லடாக் எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதுதொடர்பாக தூதரக அலுவலகத்திடம் சீனாவின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். கடுமையான சண்டையில் சீன தரப்புக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற விபரத்தை வெளியிடவில்லை.
மேலும் எல்லையில் இந்திய வீரர்களுக்கு எதிராக சீன ராணுவம் தாக்குதல் தொடுத்துள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் குற்றம் சாட்டியிருப்பது பொய் என்று சீன பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.