கல்லூரி திறக்கப்பட்டால் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை வழங்கி உள்ளது, யூஜிசி. ஒரு அறையில் ஒரு மாணவர்க்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யூஜிசியின் அறிவிப்பு
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வரும் நிலையில், பாதிப்பு குறைந்து வருவதால் கல்லூரிகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அறிவிப்பு வெளிவந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான விடுதியையும் திறக்கலாம் என்று அறிவித்தனர்.
கட்டுப்பாடு
இன்று யுஜிசி கடும் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு “ஒரு அறையில் ஒரு மாணவர்க்கு மட்டுமே அனுமதி” என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களின் நலனை கருதி எடுக்கப்பட்டது. ஒரு அறையில் அதிகமான மாணவர்கள் இருந்தால் கொரோனா பரவல் அதிகமாகி விடும் என்பதால் பல்கலைக்கழக மானியக் குழு இத்தகைய அறிவிப்பை வெளிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கல்லூரிகளை திறந்த பின் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை அவசியம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கொரோனா நெகடிவ் என்ற சான்றிதழை கொண்டு வந்தாலும் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறாக யுஜிசி கடும் கட்டுப்பாடு அறிவிப்பை அறிவித்துள்ளது.