தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக உள்ளது. இந்த நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணி முரண்பாடாக உள்ளது. அதேபோல் முந்தைய ஆட்சியில் அதிமுக-வும் வன்னியர் சமூக மக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டது. ஆனால் திமுக அரசு வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கும்.” என தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
ICC 2024: மார்ச் மாதத்திற்கான player of the month.., விருதை தட்டிச் சென்ற வீரர் & வீராங்கனை!!