தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளின் இரு தினங்களுக்கு முன்னதாகவே, மது விற்பனைக்கு தடை விதித்து வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் மதுக் கடைகள், பார்கள் மூடி இருக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இது மதுபிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இந்த வழித்தடத்தில் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்!!!