அண்மைக்காலமாக பல்வேறு பகுதிகளில் ரயில்கள் புறப்படும் நேரத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இதற்கு காரணம் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது தான். ஆனால் இப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் இடையே ரயில் புறப்படும் நேரம் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி இன்று மதியம் 3:30 புறப்பட வேண்டிய ரயில்கள் இரவு 8:20க்கு புறப்படும் என தெரிவித்துள்ளனர். அதேபோன்று சென்ட்ரல் ஹவுரா ரயில் இன்று இரவு 7 மணிக்கு பதிலாக 8:30 மணிக்கு புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.