உலகின் 8 முன்னணி நிறுவனங்களின் நிறுவனரும் மிகப்பெரிய கோடிஸ்வரராகவும் எலான் மஸ்க் திகழ்கிறார். இவர் கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். ஆனால் தற்போது நிலவிவரும் பொருளாதார சரிவால் எலான் மஸ்குக்கு அடிக்கு மேல் அடி வீழ்ந்து தொழில் ரீதியாக சரிவை சந்தித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் பல்வேறு பதக்கங்களை பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற இவர் வரலாறு காணாத சொத்து மதிப்பை இழந்து கின்னஸில் இடம் பெற்றார். மேலும் ட்விட்டர் நிறுவனத்தின் அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால் பணியாளர்களை வெளியேற்றிய வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
TCS ஊழியர்களுக்கு ஷாக்.,100% Work From home சேவைக்கு முடிவு! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இந்நிலையில் அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மதிய உணவுக்கு பணியாளர்கள் பணம் செலுத்த வலியுறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள ஆசிய பசுபிக் மண்டலத்துக்கான ட்விட்டர் தலைமை அலுவலகதிற்கு நிறுவனம் வாடகை தராததால் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மறுஅறிவிப்பு வரும் வரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வலியுறுத்தப்பட்டுள்ளனர்.