முன்னணி ஐடி நிறுவனமான TCS நிறுவனம், தங்கள் நிறுவன ஊழியர்களின் Work From home சேவையை 100% முடிவுக்கு கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு:
கடந்த கோவிட் காலகட்டத்தில், பெரும்பாலான ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்த பணியாற்ற அந்தந்த நிறுவனம் அறிவுறுத்தியது. தற்போது நிலைமை சீராகியுள்ளதால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலக பணிக்கு திரும்ப வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனமான TCS, தங்கள் ஊழியர்களுக்கு முக்கிய மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, 2020 க்கு பின் பணிக்கு சேர்ந்து தற்போது வீட்டில் இருந்து பணிபுரிந்து வரும் ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்புமாறு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. இதற்கு முன்பு வரை சுழற்சி முறையில் வாரத்தில் 3 நாட்கள் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில், தற்போது பணியாளர்களை முழுவதுமாக அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளது.
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இனிமே அரசு பணிக்கு இது அவசியம்., வடமாநிலத்தவருக்கு ஆப்பு!!!
சக ஊழியர்களுடன் பேசி பழகுதல், அலுவலக சூழ்நிலையை உருவாக்குதல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், வரும் 2025-க்குள் 25% ஊழியர்களை அலுவலக பணிக்கு திருப்புவது தான் தங்களின் திட்டம் என TCS நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.