தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதியை தமிழக அரசு கொண்டு வர பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதற்கட்டமாக சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் UPI மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி கொண்டு வரப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற பேருந்துகளிலும் இத்திட்டம் கொண்டு வர இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதாவது நேற்று மாநகர பேருந்துகளில் UPI முறையில் பயணச்சீட்டு பெறும் வசதி கொண்டுவரப்பட்ட நிலையில் நடத்துனர்களுக்கு இதற்கான கருவி வழங்கப்பட்டது. ஆனால் இதை உபயோகப்படுத்துவதற்கான சரியான பயிற்சி அவர்களுக்கு வழங்காததால் மிகுந்த குழப்பம் ஏற்பட்டது. எனவே இனிவரும் நாட்களில் நடத்துனர்களுக்கு இக்கருவியை பயன்படுத்தும் முறை குறித்து சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் இக்கருவி நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
PKL 2024: ஹரியானா ஸ்டீலர்ஸிடம் வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்.. புள்ளிப் பட்டியலில் பெரும் முன்னேற்றம்!!