புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் பிளே ஆப் சுற்றை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று (ஜனவரி 29) ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இதில், வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், ஹரியானா அணி 5 புள்ளி வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, பெங்கால் வாரியர்ஸ் 33 புள்ளிகள் எடுக்க, ஹரியானா ஸ்டீலர்ஸ் 35 புள்ளிகளை எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றியின் மூலம், ஹரியானா ஸ்டீலர்ஸ் 50 புள்ளிகளுடன் 5 வது இடத்திற்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக பாட்னா பைரேட்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், 32-20 என்ற புள்ளி கணக்கில், பாட்னா பைரேட்ஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
அரசியல் பயணத்திற்கு தயாரான விஜய்., கட்சி பெயர் வெளியீடு…, வெளியான நியூ அப்டேட்!!