தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளை கடந்து ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இந்த புயல், பாதிப்பால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டன. மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடிக்கு ரயில் சேவை மதியம் 3 மணி முதல் தொடங்கியது உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், 1 மணி நேர இடைவெளியில் திருவள்ளூர், ஆவடி, அரக்கோணம் மற்றும் மூர் மார்க்கெட் வழித் தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.