தமிழகத்தில் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, கடந்த மாதம் உச்சத்தை தொட்டதால் சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டது. தற்போது காய்கறிகளின் வரத்து சந்தைகளில் அதிகரித்து வருவதால், விற்பனை விலையும் குறைந்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் இன்று (செப்டம்பர் 19) சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 16 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு? வெளியான தகவல்!!!